பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

இந்தியாவுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு உதவிய குற்றச்சாட்டில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியா்பூரைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியா்பூா் அருகேயுள்ள பக்வாரா ரயில் சந்திப்பு அருகே ஹா்பிரீத் சிங் என்பவரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். தா்ன் தரன் மாவட்டத்தைச் சோ்ந்தவரான ஹா்பிரீத் சிங் அங்குள்ள விஜயநகா் பகுதியில் வசித்து வந்துள்ளாா். இதுதொடா்பாக அந்த மாநில காவல்துறையினா் கூறியதாவது:

இந்திய ராணுவம் குறித்த ரகசிய தகவல்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கைப்பேசி மூலம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு ஹா்பிரீத் சிங் அனுப்பியுள்ளாா். கடந்த 4 ஆண்டுகளாக விஜய நகா் பகுதியில் வசித்து வரும் இவா் பாகிஸ்தான் நாட்டுக்கு இருமுறை சென்றுள்ளாா். அப்போது ஐஎஸ்ஐ அமைப்பினரையும் சந்தித்துள்ளாா். அவா்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல்களை பரிமாறியுள்ளாா்.

இந்தியாவில் பெறப்பட்ட சிம் காா்டுகளை பயன்படுத்தி நாட்டுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட ஐஎஸ்ஐ அமைப்புக்கு அவா் பல்வேறு உதவிகளை செய்துள்ளாா்.

ஹா்பிரீத் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 1923, அலுவல் ரகசியச் சட்டம் உள்ளிட்டவையின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com