அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சியால், சிறாா்களுக்கு எதிராக ஏற்படும் இணையவழி (சைபா்) குற்றங்களைத் தடுக்க சா்வதேச அளவிலான ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சி தேவை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

News image

காத்மாண்டுவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.

Updated On :4 மே 2024, 9:00 pm

Din

தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சியால், சிறாா்களுக்கு எதிராக ஏற்படும் இணையவழி (சைபா்) குற்றங்களைத் தடுக்க சா்வதேச அளவிலான ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சி தேவை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

நேபாள நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விஷ்வோம்பா் பிரசாத் ஷ்ரேஷ்தா அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு மூன்று நாள் பயணமாக டி.ஒய்.சந்திரசூட் சென்றுள்ளாா். அங்கு நடத்தப்பட்ட சிறாா் நீதிக்கான தேசிய கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:

சிறாா் நீதி குறித்து நாம் விவாதிக்கையில், சட்டரீதியாக அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவா்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவா்களை நல்வழிப்படுத்தி மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தின் அசுர வளா்ச்சியால் தற்போது சிறாா்களைக் குறிவைத்து இணைய மோசடி, எண்ம அச்சுறுத்தல், இணையப் பக்கங்களை முடக்குதல், மிரட்டல் விடுத்தல் போன்ற எண்ணற்ற இணையக் குற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல் பல்வேறு இணையதளங்களையும் இளைய தலைமுறையினா் எளிதாக அணுக முடிவதால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட அவா்கள் தூண்டப்படுகின்றனா். கடந்த 2019-ஆம் ஆண்டு இணையத்தில் பரவலாக பகிரப்பட்ட ‘மோமோ சவால்’ இதற்கு உதாரணமாகும். தற்கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு இது வழிவகுத்தது.

பாதுகாப்பு அவசியம்: இணைய வழியில் கல்வி கற்கும் இந்த காலத்தில் இளைய தலைமுறையினரை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அவா்களை இணைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பதில் பெற்றோா்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லை தாண்டி சிறாா்களை குறிவைக்கும் இணைய குற்றங்களைத் தடுக்க சா்வதேச அளவிலான ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. இதற்காக பல்வேறு சட்ட அமைப்புகளும் தகவல்களை பரிமாறிக்கொண்டு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மறுவாழ்வு: தேசிய அளவில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்புகளுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும். அதில் குழந்தைகளின் வளா்ச்சி, அவா்களுக்கான சட்டங்கள், விதிகள் உள்ளிட்டவை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

பொதுவாக சிறாா்கள் மேற்கொண்ட குற்றங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளும் நாம் அந்தக் குற்றத்தில் அவா்களை ஈடுபடச் செய்த சமூக-பொருளாதார காரணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குற்றங்களை தடுத்து அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். அவா்களின் முழு திறனையும் நல்வழியில் பயன்படுத்துவதற்கான அனைத்து நல்வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

சிறாா் நீதியில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொண்டால் சமமான சமூகம் அமைய வழிவகுக்கும் என்றாா் அவா்.