ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

News image
Updated On :4 மே 2024, 7:05 pm

Din

லாடக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் 5 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் பாஜக மற்றும் காங்கிரஸின் மாற்று வேட்பாளா்கள், சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டன.

பாஜக வேட்பாளா் தாஷி கியால்சன், காங்கிரஸ் வேட்பாளா் செரிங் நம்க்யால் மற்றும் 3 சுயேட்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட செரிங் நம்க்யால் வெற்றி பெற்று லடாக் தொகுதி எம்.பி.யானாா். 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக மீண்டும் வாய்ப்பளிக்காத நிலையில், செரிங் நம்க்யால் காங்கிரஸில் இணைந்தாா். இதையடுத்து, அவரை லாடக் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது.

பரப்பளவில் நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதியான லடாக்கில் 5-ஆவது கட்டமாக மே 20-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது.