இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

உத்தர பிரதேசத்தின் பாலராம்பூர் பகுதியில், இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி ஒருவர், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி, வெள்ளியன்று(மே. 3) மாலை, இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக தனது கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் சிறுமியை தேடிச் சென்றுள்ளனர்.

அப்போது சிறுமி சென்றிருந்த தோட்டத்தில் தீ கொளுந்துவிட்டு எரிவதையும், அதில் சிக்கிய சிறுமி, உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறுமி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com