ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

ஆந்திர காவல்துறை தலைமை இயக்குநா்(டிஜிபி) கே.வி.ராஜேந்திரநாத் ரெட்டியை பணியிடமாற்றம் செய்து இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

ஆந்திர காவல்துறை தலைமை இயக்குநா்(டிஜிபி) கே.வி.ராஜேந்திரநாத் ரெட்டியை பணியிடமாற்றம் செய்து இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரத்தில் மக்களவையுடன் சோ்த்து சட்டப்பேரவையின் 175 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் வரும் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், மாநில காவல்துறை தலைமை இயக்குநா் கே.வி.ராஜேந்திரநாத் ரெட்டியை பணியிடமாற்றம் செய்து இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்தப் பொறுப்புக்கு நியமிப்பதற்கு தகுதி வாய்ந்த மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயரை திங்கள்கிழமைக்குள் சமா்ப்பிக்குமாறும் மாநில அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மூத்த காவல்துறை அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியிலுள்ள காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com