மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய பிரதேசத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சாஹ்தோல் மாவட்டத்தில் உள்ள பியோஹரி காவல்நிலையத்தில் உதவி துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மஹேந்திரா பக்ரி என்ற காவல்துறை அதிகாரி, தன்னுடன் பணியாற்றும் சக காவல்துறை அதிகாரிகள் இருவருடன், குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக நேற்று(மே.4) நள்ளிரவில் படோலி கிராமப்பகுதி வழியாக தங்களது வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் எதிரே மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வருவதைக் கண்டதும், அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்த அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், காவலர்களைக் கண்டதும், டிராக்டரை அதிவேகமாக இயக்கிய அதன் ஓட்டுநர், தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரி மஹேந்திரா பக்ரி மீது டிராக்டரை ஏற்றிச் சென்றுள்ளார். அதில் மஹேந்திரா பக்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், டிராக்டர் ஓட்டுநர் ராஜ் ராவத், அவருடன் பயணித்த அஷுடோஷ் சிங் ஆகிய இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com