கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி.
கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தில்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவுக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி கவிதா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்பதால் ஜாமீனுக்கு அவா் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com