ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இரண்டு மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இரண்டு மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐயிடம் கனரா வங்கி புகார் அளித்ததையடுத்து, அந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் அவரின் மனைவி அனிதா, அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து நரேஷ் கோயலை கைது செய்தது. தற்போதை அவர் நீதிமன்றக் காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

பிப்ரவரியில் சிறப்பு நீதிமன்றம் கோயலுக்கு ஜாமீன் மறுத்துவிட்டது, ஆனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற அனுமதித்தது.

பின்னர் கோயல், தகுதி அடிப்படையில் ஜாமீன் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனில் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி மருத்துவ காரணங்களுக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும் இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளார்.

அத்துடன் 1 லட்சம் ஜாமீன் தொகையை கோயல் செலுத்த வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என்றும், கோயலின் கடவுச்சீட்டை ஒப்படைக்கக் கோரியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com