தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அகமதாபாத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள 6-7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக பள்ளி நிகர்வாகம் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

உடனே மின்னஞ்சல்கள் வந்த பள்ளிகளுக்கு காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளிகளில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தில்லியை தொடர்ந்து அகமதாபாத் பள்ளிகளுக்கு அதே ரஷிய டொமைனில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

முன்னதாக மே 1ஆம் தேதி, தில்லி-என்சிஆர் முழுவதும் 150 பள்ளிகளுக்கு இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com