corona test
corona test

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

வெஸ்ட் நைல் காய்ச்சலானது குலெக்ஸ் வகை கொசுக்களால் பரவுகிறது.

வடக்கு கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும் வெஸ்ட் நைல் வைரஸ், கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது.

குழந்தைகள் உள்பட வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தற்போது நலமாக இருப்பதாகவும், மேலும் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து புதிய வழக்குகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் மாவட்ட கண்காணிப்புக் குழுவின் அதிகாரி தெரிவித்தார்.

ஒருவர் மட்டும் வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். வெஸ்ட் நைல் நோயின் அறிகுறிகள் காணப்பட்டால், புணேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு சோதனைக்கு அனுப்பப்படுகின்றது.

வெஸ்ட் நைல் காய்ச்சலானது குலெக்ஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தான நரம்பியல் நோயை ஏற்படுத்தலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. இது முதன்முதலில் 1937இல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது.

இந்த காய்ச்சல் முதன்முதலாக கேரளத்தில் 2011ல் கண்டறியப்பட்டது. மலப்புரத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் 2019ல் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com