ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி
படம் | பி.டி.ஐ

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை புறப்பட்ட மோடி, அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார்.

படம் | பி.டி.ஐ

அதன் பின், செய்தியாளர்களுடன் பேசிய அவர், ”தேர்தல் கள நிலவரத்தை ஆய்வு செய்ய செல்லும் ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை. அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும். இது உடல்நலனுக்கு நல்லது. இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குஜராத்தை சேர்ந்த வாக்காளராக நான் இங்கே வழக்கமாக வாக்களித்து வருகிறேன். வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

படம் | பி.டி.ஐ

இதனிடையே, வாக்கு செலுத்திவிட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த பிரதமர் மோடி, வாக்குச்சவடிக்கு வெளியே நின்றிருந்த வாக்காளர்களிடம் மகிழ்ச்சியாக கலந்துரையாடியதையும் காண முடிந்தது.

படம் | பி.டி.ஐ
படம் | பி.டி.ஐ

அப்போது, வயதான பெண்மணி ஒருவர் அவருக்கு கையில் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தார்.

படம் | ஏ.என்.ஐ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com