கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கேஜரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது
கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கேஜரிவாலின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கியது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 15ம் தேதி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது தேர்தல் நேரம் என்பதால் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் ஜாமீன் வழங்கினால் என்ன நிபந்தனைகள் விதிக்கலாம் என்பது தொடர்பாக விரிவான வாதத்திற்கு தயாராக வாருங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மே 7ஆம் தேதி அமலாக்கத்துறை வாதமும் தொடரும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. கேஜரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com