பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாதரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
குவாதர் காவல் நிலைய அதிகாரி கூறுகையில்,
சர்பந்தர் பகுதியில் உள்ள குவாதர் மீன் துறைமுகத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
இறந்தவர்கள் அப்பகுதியில் முடிதிருத்தும் கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் என்பது தெரிய வந்தது.இவர்கள் பஞ்சாபின் கானேவால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் குவாதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குவாதரில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்தார்.
பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் மிர் ஜியா உல்லா லங்காவ், ஏழு பேர் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.