இலங்கை அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2022ல் இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபட்ச பதவி விலகியதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடையும் நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் 225 இடங்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டில் ஒருவரை அதிபராக தேர்வு செய்ய பெரும்பான்மை எண்ணிக்கையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் வாக்களிப்பின்றி அந்நாட்டு நாடாளுமன்றம் நேரடியாக அதிபரைத் தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.