மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!
/

ஐடி நிறுவனத்தைச் சுற்றி திரிந்த சிறுத்தை: தேடுதல் பணியில் வனத்துறை

ஐடி நிறுவனத்தைச் சுற்றி வந்த சிறுத்தையைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image

சிறுத்தை | Pexels

Updated On :7 பிப்ரவரி 2024, 8:48 pm IST

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளாகத்தில் சுற்றி திரிந்த பெண் சிறுத்தை மற்றும் அதன் இரு குட்டிகளைத் தேடும்பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் சிறுத்தை முதலில் செவ்வாய்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் சூப்பர் காரிடர் பகுதியில் தென்பட்டது. இன்போசிஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி அது.

அதற்கு அருகில் உள்ள வேளாண் நிலத்தில் புதன்கிழமை சிறுத்தைகளைப் பார்த்ததாக விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

கோதுமை விளைவிக்கப்பட்ட நிலத்தில் குட்டிகளைப் பாதுகாப்பாக பெண் சிறுத்தை மறைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வட்டார வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இன்போசிஸ் வளாகத்தில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

130 ஏக்கர் அளவில் விரிந்த பகுதியில் அமைந்திருக்கும் இன்போசிஸ் அலுவலகத்தைச் சுற்றி புல் மற்றும் புதர்கள் மண்டி காணப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தின் வணிக தலைநகரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த ஐடி நிறுவனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.