ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 லட்சம் லட்டு அனுப்பி வைப்பு!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் லட்டுகளை முதல்வர் மோகன் யாதவ்  அயோத்திக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News image
கோப்புப் படம்
Updated On :19 ஜனவரி 2024, 11:55 am

DIN

போபால்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் லட்டுகளை ஏற்றிச் செல்லும் ஐந்து லாரிகளை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இன்று அயோத்திக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்த யாதவ், ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை நிராகரித்தவர்களுக்கு நல்ல புத்தி நிலவ வேண்டும் என்றார்.

அயோத்தி நிகழ்வு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி எதிர்க்கட்சிகள் அழைப்பை நிராகரித்துள்ளன.

பேரரசர் விக்ரமாதித்யா அயோத்தியில் முன்பு கோயிலைக் கட்டினார். 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தற்போது ராமர் கருவறைக்கு திரும்புகிறார். ஜனவரி 22ஆம் தேதி அவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும். அவர்களும் ராமரின் தரிசனத்தைப் பெறட்டும். யாதவ் தனது அமைச்சரவை சகாக்களுடன் கொடிகளை அசைத்து, ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களுக்கு மத்தியில், தேர் வடிவிலான அலங்கரிக்கப்பட்ட லாரியை துவக்கி வைத்தார்.

பாபா மகாகல் பிரசாதமாக அயோத்திக்கு இனிப்பு அனுப்பப்படும் என்று முதல்வர் அறிவித்த ஐந்து நாட்களில் குறைந்தது 150 கோயில் ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த லட்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டதாக மகாகாளேஸ்வரர் கோயிலின் உதவி நிர்வாகி மூல்சந்த் ஜுன்வால் தெரிவித்தார்.

அண்டை மாநிலமான சத்தீஸ்கர் 300டன் சிறந்த அரிசியை அயோத்திக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.