தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 லட்சம் லட்டு அனுப்பி வைப்பு!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் லட்டுகளை முதல்வர் மோகன் யாதவ்  அயோத்திக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜனவரி 2024, 5:25 pm IST

போபால்: ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் லட்டுகளை ஏற்றிச் செல்லும் ஐந்து லாரிகளை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இன்று அயோத்திக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்த யாதவ், ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை நிராகரித்தவர்களுக்கு நல்ல புத்தி நிலவ வேண்டும் என்றார்.

அயோத்தி நிகழ்வு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி எதிர்க்கட்சிகள் அழைப்பை நிராகரித்துள்ளன.

பேரரசர் விக்ரமாதித்யா அயோத்தியில் முன்பு கோயிலைக் கட்டினார். 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தற்போது ராமர் கருவறைக்கு திரும்புகிறார். ஜனவரி 22ஆம் தேதி அவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும். அவர்களும் ராமரின் தரிசனத்தைப் பெறட்டும். யாதவ் தனது அமைச்சரவை சகாக்களுடன் கொடிகளை அசைத்து, ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களுக்கு மத்தியில், தேர் வடிவிலான அலங்கரிக்கப்பட்ட லாரியை துவக்கி வைத்தார்.

பாபா மகாகல் பிரசாதமாக அயோத்திக்கு இனிப்பு அனுப்பப்படும் என்று முதல்வர் அறிவித்த ஐந்து நாட்களில் குறைந்தது 150 கோயில் ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த லட்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டதாக மகாகாளேஸ்வரர் கோயிலின் உதவி நிர்வாகி மூல்சந்த் ஜுன்வால் தெரிவித்தார்.

அண்டை மாநிலமான சத்தீஸ்கர் 300டன் சிறந்த அரிசியை அயோத்திக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.