பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மத்திய நிதியை விடுவிக்கக் கோரி மம்தா பேரணி: பிப். 2 முதல் தர்னா அறிவிப்பு

மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தொண்டர்களுடன் பேரணி சென்றார்.

News image
மம்தா பேரணி
Updated On :30 ஜனவரி 2024, 7:20 am

DIN

மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தொண்டர்களுடன் பேரணி சென்றார்.

மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய ரூ. 7,000 கோடி நிதியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.

மேலும், மேற்கு வங்கத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் பிப்.2-ஆம் தேதி முதல் தர்னா போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று காலை திடீரென கட்சித் தொண்டர்களுடன் 1.5 கிலோ மீட்டர் சாலையில் நடந்து சென்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மம்தாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, “மேற்கு வங்கத்துக்கு அளிக்கப்பட்ட மத்திய நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதால் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, இது வெறும் தேர்தல் நாடகம்.” என்று விமர்சித்துள்ளார்.

மம்தாவில் அரசியல் வரலாற்றில் ஏற்கெனவே 2006-ஆம் ஆண்டு 25 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டமும், 2019 மற்றும் 2023-ஆம் ஆண்டில் தர்னா போராட்டமும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.