புதுதில்லி, ஜூன் 3: மக்களவைத் தாற்காலிக தலைவராக 25 ஆண்டுகளுக்கு முன் தனது தந்தை ஜெகஜீவன்ராம் பயன்படுத்திய இருக்கையில் மக்களவைத் தலைவர் மீரா குமார் புதன்கிழமை அமர்ந்தார்.
தலித் தலைவரான ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராகவும் இருந்தவர். 1980ல் அமைந்த 7 வது மக்களவை மற்றும் 1984ல் அமைந்த 8 வது மக்களவைக்கு தாற்காலிக தலைவராக இருந்தவர்.
மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன் ராம் 1986ல் அவர் இறக்கும்வரை 40 ஆண்டு காலம் எம்பியாக இருந்தவர்.