சென்னை, டிச.1: மய்யம் என்ற பெயரில் இணைய இதழைத் தொடங்க நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
ரசிகர்களுக்காக முன்பு மய்யம் என்ற பத்திரிகையை தொடங்கி கமல் சில காலம் நடத்தினார்.
பின்னர் அந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் மய்யம் பத்திரிகையை சிறிய வடிவில் நடத்த ஆரம்பித்தார்.
இப்போது மய்யம் பத்திரிகை முழுமையான இணைய இதழாகிறது.
ரசிகர்மன்ற நிகழ்ச்சிகள், தனது படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், இலக்கிய கட்டுரைகள் போன்றவற்றை இந்த இணைய தளத்தில் பதிவேற்ற செய்ய கமல் முடிவுசெய்துள்ளார்.
மேலும் இந்த தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடவும் முடிவு செய்துள்ளார் கமல். அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது பார்வை பற்றிய கருத்துக்களையும் இதில் பதிவு செய்கிறார். மய்யம் இணையதளத்துக்கு விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த தகவல்களை சமீபத்தில் நடந்த ஃபிக்கி மாநாட்டு செய்தியாளர் சந்திப்பின்போது கமல் தெரிவித்தார்.