இன்று மகாளய அமாவாசை தினம் என்பதால், ராமேஸ்வரத்தில் பக்தர்கள் குவிந்தனர். மகாளய அமாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குளித்து நீத்தார் கடன் செலுத்துவது வழிவழியாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் காலை முதல் அக்னி தீர்த்தக் கடல் குளியலுக்கும் முன்னோருக்கு திதி கொடுப்பதற்காகவும் பக்தர் கூட்டம் அலைமோதியது.