கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று இரவு இலங்கைக் கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். இலங்கைக் கடல் பகுதி எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற 5 படகுகளில் இருந்து மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்த இலங்கைக் கடல்படையினர், அவர்களை எச்சரித்து திரும்பிச் செல்லுமாறு எச்சரித்து விரட்டினர்.