திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய நாகநாதன் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அவர் தாற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனால் ஏற்பட்ட காலியிடத்துக்கு திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி டி.பத்மநாபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.கலையரசன் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார்.