நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினி, தனது அறையில் செல்போன் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினி, தனது அறையில் செல்போன் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து வேலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.அதில், ஒரே குற்றச்சாட்டில் இரண்டாவது முறை வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதே குற்றச்சாட்டிற்கு சிறை அதிகாரி தமக்கு ஏற்கனவே தண்டனை வழங்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும், அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் நளினி தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com