மதுரை மாவட்டம் செக்கனூரனி அருகே கண்ணமனூர் கண்மாய் ஓரமாக புதன் கிழமை அதிகாலையில் ஆண்பிணம் ஒன்று இரத்த வெள்ளத்தில் கிடந்தது.தகவல் அறிந்து உசிலம்பட்டி துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் ,செக்கானூரனி காவல் ஆய்வாளர் சுகுமார் ஆகியோர் விரைந்து சென்று சடலத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செக்கானூரனியை அடுத்த நடுமுதலைக் குளத்தை சேர்ந்த சின்னசாமி மகன் சுகுமார் (31).இவர் செக்கானூரனியில் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.இவருக்கு திருமணம் ஆகவில்லை .வலங்காகுளத்தை சேர்ந்த காசிநாதன் மகன் ராஜ்குமார் (18),மகா நாடு மகன் கோட்டைசாமி (19) இருவரும் சேர்ந்து சுகுமாரை கழுத்தை அறுத்து பாட்டிலால் குத்தியும் கொலை செய்து கண்ணமனுர் கண்மாய் ஓரமாக விசிவிட்டு சென்றுள்ளனர் .
ராஜ்குமார் அம்மா மின்னல்கொடிக்கும் இறந்து போன சுகுமார்க்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது .