களக்காடு புலிகள் வனக் காப்பகம் பகுதியில் கிராம வனக்குழுக்கள் பல உள்ளன. இதில், கணக்காளர்களாக சகோதரிகள் இருவர் பணியில் இருந்தனர். கடந்த சில வருடங்களாக இவர்கள் வசூலித்த பணத்தை வனத்துறையில் சேர்ப்பிக்காமல் கையாடல் செய்துள்ளதாகவும், அவர்கள் கையாடல் செய்த பணம் ரூ.21 லட்சம் என்றும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சேகர் மற்றும் அதிகாரிகள் கூறினர். நேற்று இந்தப் புகாரை அவர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்தனர்.
இதனிடையே கணக்காளர் பெண்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதாக இன்று செய்தியாளர்களிடம் சேகர் மற்றும் வனக் காப்பாளர்கள் தகவல் தெரிவித்தனர்.