சென்ற டிசம்பர் மாதம் தொடரப்பட்ட அரசு மீதான அவமதிப்பு வழக்கு தொடர்பாக இன்று காலை 11.30 மணிக்கு நாகர்கோவில் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நேரில் ஆஜராக வேண்டியிருந்தால், நீதிபதி முன் வந்த அவரை, குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டும் என அதிமுக தரப்பு வழக்குரைஞர்கள் கூச்சலிட்டனர். அதற்கு தேமுதிக வழக்குரைஞர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பு வழக்குரைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் விஜயகாந்த்தின் உதவியாளர் கண்ணன் என்பவர் காயம் அடைந்தார்.