இளவரசன் மரணத்தை அடுத்து, திவ்யாவுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அவர் மன நல ஆலோசனை பெற விரும்பினால் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியது.
அதனை ஏற்ற திவ்யா தரப்பு, சென்னைக்கு வர முடியாது என்றும் தருமபுரியிலேயே அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரியது.
இதைஅடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியது நீதிமன்றம்.