சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே தலாக்காடு கிராமத்தின் கொண்டக்கல்காடு பகுதியைச் சேர்ந்தவர் கரியக்கவுண்டர் (61). இவர் முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகம் வந்தார். பின்னர் அங்கே கேட்டபடி மருத்துவச் சான்றிதழ் வாங்கி வந்து, தாலுகா அலுவலகம் சென்று கொடுத்து விட்டு, அங்கிருந்து இறங்கி வந்தபோது திடீரென மயக்கம் அடைந்து விழுந்து உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி சின்னம்மாள் 2 மகன்கள், ஒரு பெண் ஆகியோர் உள்ளனர்.
முதியோர் உதவித் தொகை விண்ணப்பிக்க வந்து தாலுகா அலுவலகம் அருகிலேயே ஒருவர் மயங்கி விழுந்து இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.