ஐபிஎல் சூதாட்டம் வழக்கு தொடர்பாக ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு சென்னை சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து அவர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்:-ஐபிஎல் சூதாட்டத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும்இல்லை. வேண்டுமென்றே போலீஸார் என்னை இந்த வழக்கில் தவறாக சேர்க்கப்பார்கிறார்கள் அதனால் என்னை கைது செய்தாக வகையில் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.பி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்ககுறைஞர் ஏ.எல் சோமையாஜி, ஏற்கனவே கைது செய்யபட்டுள்ளவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் விக்ரம் அகர்வாலிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஆகவே அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என கூறினார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி விக்ரம் அகர்வாலின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.