நாகர்கோவிலில் புதிய பென்சன் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

மக்களவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த புதிய பென்சன் மசோதாவை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தியும்,  ஓய்வு கால சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மத்திய அரசு பன்னாட்டு

புதிய பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.எம். ஐவின் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் கே. செல்லப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. அய்யப்பன் பிள்ளை, ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் நலச் சங்க நிர்வாகி லட்சுமணன், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. மீனாட்சிசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் தங்கமோகன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.

மக்களவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த புதிய பென்சன் மசோதாவை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தியும்,  ஓய்வு கால சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மத்திய அரசு பன்னாட்டு முதலாளிகளிடம் அவற்றை ஒப்படைத்து சீரழிக்க முயற்சி செய்வதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com