ஜம்முவில் ஊரடங்கு : அமர்நாத் யாத்திரை பாதிப்பு
By dn | Published On : 19th July 2013 10:41 AM | Last Updated : 19th July 2013 10:41 AM | அ+அ அ- |

ஜம்முவில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அமர்நாத் யாத்திரை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்ல ஜம்முவுக்கு வந்திருக்கும் மக்கள் அனைவரும், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரைக்கு வியாழக்கிழமை கிளம்பிய குழுவினர், பாதுகாப்புப் படையினரின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.