நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி : மதுரைக் கிளை நீதிபதி
By dn | Published On : 19th July 2013 10:59 AM | Last Updated : 19th July 2013 10:59 AM | அ+அ அ- |

நீதிமன்றத்தில் தமிழில் வாதாட விதிக்கப்பட்டிருந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி மணிக்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே, நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாட அனுமதிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை திரும்பப் பெறுவதாக, கிளை நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் இன்று கூறினார்.
வழக்குறைஞர் ராமசாமியின் 2 வழக்குகளை தமிழில் வாதாட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.