மேகாலயாவில் உள்ள சிஎம்ஜே பல்கலைக்கழகம், ஏராளமானோருக்கு பணத்தை வாங்கிக் கொண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு பட்டப்படிப்பு சான்றிதழுக்கும் ஒவ்வொரு விலை வைத்து விற்பனை செய்திருக்கும் சிஎம்ஜே பல்கலைக்கழகத்தின் மூலம், நாக்பூரைச் சேர்ந்த பலர், போலி சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் அதிகப்படியான பிஎச்டி டிகிரியை வழங்கும் பல்கலைக்கழகமாக விளங்கி வந்த சிஎம்ஜே, 2 முதல் 5 லட்சங்களைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு பிஎச்டி டிகிரியை வழங்கி வந்துள்ளதை அம்மாநில காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றுக்காக பலர் இதுபோன்ற போலி சான்றிதழைப் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.