செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செயற்கைக் கோள், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஹெலன் புயலை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
தற்போது புவி வட்டப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் மங்கள்யான், வரும் டிசம்பர் 1ம் தேதி புவி வட்டப் பாதையில் இருந்து விலகி செவ்வாயை நோக்கி தனது பயணத்தை துவக்கும்.
இந்த நிலையில், ஹெலன் புயலை மங்கள்யான் செயற்கைக் கோள் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.