சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சென்னை நந்தகுமார் அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்ட ஆச்சாள்புரம் சின்னதம்பி குழுவினரின் 'சிவாலய வழிபாட்டில் நாகஸ்வர இதை மரபு' குறித்த தொகுப்பு காட்சியான "நாதனும், நாதமும்" என்ற வீடியோ குறுந்தகடு வெளியீட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கிருஷ்ணசாமி தீட்சிதர் தலைமை வகித்துப் பேசினார். சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் குறுந்தகட்டை வெளியிட்டார். முதல் குறுத்தகட்டை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் பெற்றுக்கொண்டார். இசையறிஞர் பி.எம்.சுந்தரம் அறிமுகவுரையாற்றினார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் வாழ்த்துரையாற்றினார். விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜி.வி.பாலதண்டாயுதம் பிள்ளை, டாக்டர் எஸ்.செல்வமுத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.