அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே மோடி கூட்டத்தில் பங்கேற்க அனுமதி: பொன். ராதாகிருஷ்ணன்

திருச்சியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கிறார்.பாஜக தேர்தல் பிரசாரக் குழுவின்
அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே மோடி கூட்டத்தில் பங்கேற்க அனுமதி: பொன். ராதாகிருஷ்ணன்

ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்தி அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே திருச்சியில் நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநில மாநாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கிறார்.பாஜக தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார். மோடியின் வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதால் பாஜகவினர் மிகவும் உற்சாகத்துடன் மாநாட்டு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.மாநாடு நடைபெறும் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியேற்றி பேசுவதுபோல வடிமைக்கப்பட உள்ளது.மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

நரேந்திர பங்கேற்கும் கூட்டத்துக்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மோடியின் வருகையை எதிர்பார்த்துள்ளனர். அது குறித்து எங்களிடம் பேசியும் வருகின்றனர்.மோடியைப் பார்ப்பதற்காக இதுவரை இணையதளம் மூலமும், நேரடியாகவும் சுமார் 1 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு இமெயில் மூலம் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். அதனுடன் ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.

நுழைவுக் கட்டணம் செலுத்தி அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே மாநாட்டில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக மாநாட்டு அரங்கில் 200-க்கும் அதிகமான கவுன்டர்கள் அமைக்கப்படும்.கூட்டத்தில் 1 லட்சம் பேர் அமர இருக்கைகள் போடப்படும். கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்காக 500-க்கும் அதிகமான பாஜக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தேசிய இளைஞரணித் தலைவர் அனுராக்சிங் தாகூர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்ரனர் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com