உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் பெயர்களை, அம்மாநில பாஜக, வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலில் இணைத்துள்ளது.
உத்தரப்பிரதேச பாஜக அரசு, மேலிடத்துக்கு அனுப்பியுள்ள 200 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பரிந்துரை பட்டியலில், முசாபர்நகர் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் ராணா, ஹக்கும் சிங், சஞ்சீவ் சோம், பாரத்தேந்து ஆகியோர் இடம்பெற்றுள்ளதை, அம்மாநில கட்சித் தலைவர் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கட்சி மேலிடம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அவர்கள் கட்சியைப் பணியை மட்டுமே ஆற்றிவருகின்றனர் என்கிறது.