இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 4 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பாரதி நகரைச் சேர்ந்த உதயகுமார்(35), பாலாஜி(35) ஆகியோர், கடந்த செப்.1ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்திய போலீஸ் விசாரணையில், பழனியைச் சேர்ந்த ரா.துர்கைராஜன்(30), சே.பூபாலன் (25), ரா.காளிதாஸ்(31), ம.செந்தில்பாண்டி(22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இவர்கள் 4 பேரையும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான 4 பேரும், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.