ஆப்பிரிக்காவின் சகாரா பகுதி மக்கள் நேற்று லிபியாவின் கடற்பகுதியில் ஒரு படகில் சென்று கொண்டிருந்த போது அந்த படகு திடீர் என கடலில் மூழ்கியது.
இதில் 40 பேர் பலியாகினர். தலைநகர் திரிபோலியிலிருந்து 37 மைல் கிழக்கே உள்ள ரமி கால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக லிபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கிய 51 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவிக்கிறது.