ராமநாதபுரம் அருகே மதுரை - மண்டபம் தேசிய நெடுஞாலையில் சாத்தான் குளம் விலக்கு அருகே காரும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ரெட்டையூரணி கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி (32) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை ராமநாதபுரம் தலைமை அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்கக அனுமதித்துள்ளனர். இதில் 2 பேர் ஆபந்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த விபத்துக் குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.