புதுச்சேரியில் பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களின் பெயர்கள் பதிவுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக புதுச்சேரி மாவட்டப் பதிவாளர் ச.சக்திவேல் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் சில சீட்டு நிறுவனங்கள் அரசு ஒப்புதல் பெறாமல் சீட்டு நடத்தி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றி விட்டதாக பல புகார்கள் வந்துள்ளன.
இதுபோன்ற சீட்டுநிறுவனங்களிடம் இருந்து மக்களை காக்க இந்திய அரசு சீட்டு நிதிசட்டம், மற்றும் பரிசு சீட்டுகள் மற்றும் பணசுழற்சி திட்ட தடைச்சட்டம், இயற்றி உள்ளது.
எனவே புதுச்சேரியில் பதிவுத் துறையிóல் பதிவு பெற்று சீட்டு நடத்தி வரும் சீட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சீட்டு பிரிவுகளின் விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக புதுவை அரசாங்க இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
(ஜ்ஜ்ஜ்.ல்ஹ்.ஞ்ர்ஸ்.ண்ய்). இதன் அடிப்படையில் பொதுமக்கள் இந்த நிறுவனங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, போலி நிறுவனங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் சக்திவேல்.