ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூன் நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய பான் கி மூனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெறும் சர்வதேச தொழில் வளர்ச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அவரது இந்திய பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பான் கி மூன் சந்திக்கவுள்ளார்.