ஒலிம்பிக்கில் பெண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு போட்டியில் சானியா-பிராத்தனா ஜோடி, சீனாவின் ஷூகாய் பெங்-ஷூகாய் ஷங் ஜோடியிடம் 6-7,7-5, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா – பிரார்த்தனா தோம்ரே இணை சீனாவின் ஷுய் பென்ங், ஷுஆய் சங் இணையுடன் மோதியது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன ஜோடியை சானியா – தோம்ரே இணை இரண்டாம் சுற்றில் வீழ்த்தியது. இருப்பினும் 3ஆம் சுற்றில் பதிலடி கொடுத்து சீன இணை வெற்றி பெற்றது.
முதல் செட்டை 6க்கு7 என்ற கணக்கில் சீன இணை கைப்பற்றிய நிலையில், இரண்டாம் சுற்றில் 7க்கு 5 என்ற கணக்கில் சானியா இணை சமன் செய்தது. 3வது சுற்றில் எழுச்சி பெற்ற சீன இணை 5க்கு7 என்ற கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தியது.