புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று காலை காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது மகள் கனிமொழி எம்.பி.யிடம் விசாரித்தார்.
கருணாநிதியின் சிறப்பு மருத்துவர் கோபாலையும் சந்தித்து விசாரித்து அறிந்தார். அப்போது ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: - தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி கனிமொழியிடம் கேட்டறிந்தேன். அவர் நன்றாக குணம் அடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.
கருணாநிதி அன்றாடம் அரசியல் நிகழ்வில் இருக்க கூடியவர். அவர் பூரண உடல் நலம் பெற்று அரசியல் பணிக்கு விரைவில் திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.