காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் செவ்வாய்கிழமை இருவர் உயிரிழந்தனர்.
ஊரப்பாக்கம், லக்ஷ்மி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(70).
இவர் தன் நண்பரின் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லியில் இருந்து வண்டலூர் நோக்கிச் சென்றார். அப்போது எருமையூர் அருகே செல்லும்போது பின்பக்க டயர் வெடித்ததில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.
இதில் காயமடைந்த தினகரன் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக சோமங்கலம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் சின்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த துரை மகன் சாரதி(33). இவர் சின்னசமுத்திரத்தில் இருந்து சோத்துப்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். சோத்துப்பாக்கம் அருகே செல்லும்போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.
இவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.