நெய்வேலி அருகே கோவில் காவலாளியைத் தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

நெய்வேலி அருகே ஊமங்கலம் கிராமத்தில் உள்ள செம்ப ஐய்யனார் கோவில் காவலாளியைத் தாக்கி கோவில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள்

நெய்வேலி: நெய்வேலி அருகே ஊமங்கலம் கிராமத்தில் உள்ள செம்ப ஐய்யனார் கோவில் காவலாளியைத் தாக்கி கோவில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நெய்வேலியை அடுத்து ஊமங்கலம் கிராமத்தில் செம்ப ஐய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கோவில் காவலாளியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்கிழமை இரவு கோவில் காவல் பணியில் இருந்த ரவியை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு, கோவில் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஊமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்து வந்த ஊமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
மர்ம நபர்கள் சுமார் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com