புதுச்சேரி,
புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே (சென்னை எழும்பூர் வழியாக) சுவிதா சிறப்பு ரயில் வரும் நவம்பர் 12-ம் தேதி இயக்கப்படுகிறது.
புதுவையில் இருந்து சுவிதா ரயில் (எண்.82630) நவம்பர் 12-ம் தேதி காலை 7,15 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும். இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள்-2, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி-1, தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள்-7, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்-6, சரக்கு மற்றும் பிரேக் வேன் பெட்டிகள்-2 உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.
நிறுத்தங்கள்: சுவிதா ரயில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடுர், நெல்லூர், ஒங்கோல், சிராளா, தெனாலி, விஜயவாடா, எலூரு, தாடேபள்ளிகூடம், ராஜமன்றி, சாமல்கோட்டை, துவ்வாடா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ரோடு, பலாசா, பிரமாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பத்ரக், பாலசோர், கரக்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
விழுப்புரம்-விசாகப்பட்டினம் சிறப்புக் கட்டண ரயில் இதே போல் விழுப்புரத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு சிறப்பு கட்டண ரயில் எண். 08354) வரும் நவம்பர் 1, 3, 6, 8, 13, 15-ம் தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு விசாகப்பட்டினத்துக்கு அடுத்த நாள் பிற்பகல் 3.15 மணிக்கு சென்றடையும்.
இதில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 1, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 2, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 4, சரக்கு மற்றும் பிரேக் வேன் பெட்டிகள்-2 இடம் பெற்றிருக்கும்.
நிறுத்தங்கள்: செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர், ஒங்கோல், தெனாலி, விஜயவாடா, எலூரு, ராஜமன்றி, சாமல்கோட்டை, துனி, துவ்வாடா. இத்தகவலை தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.