வாரணாசி
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் வரும் 24-ம்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டரேகா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் அவர் வாரணாசியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் உர்ஜா கங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் வாரணாசி-அலகாபாத் இரட்டை ரயில் பாதை மற்றும் மின் மயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கக்கூடிய சிறப்பு என்ஜினையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதுதவிர வாரணாசி கண்டோன்மென்ட்பகுதியை கடந்து செல்லும் பூலாவாரியா நான்குவழிச் சாலைக்கும் அடிக்கல் நாட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.