ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது தி.மு.க. சார்பில் நடத்தப்படும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜனதா கலந்து கொள்ளாது என்று கூறினார். மேலும்
தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்படும். தி.மு.க. அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தும் முன் அவர்களுடைய கூட்டணி கட்சிகளை முதலில் அழைத்து பேச வேண்டும் என்று அவர் கூறினார்.