கோவா மாநில முதல் பெண் முதல்வரான சசிகலாக கோத்கர் உடல் நல குறைவால் மரணமடைந்தார்.
கோவா மாநிலத்தின் முதல்பெண் முதல்வரான சசிகலா ககோத்கர் கடந்த 1979ம் ஆண்டில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். இவரது தந்தை மாநிலத்தின் முதல் முதல்வரான தயானந்த் பண்டோட்கர் ஆவார். இவர் மகாராஷ்டிராவாடி கோமந்தக் என்ற கட்சியை உருவாக்கினார். 1973-ம் ஆண்டு தயானந்த் மறைந்ததை அடுத்து கட்சி பிளவு படாமல் இருப்பதற்காக 1979-ல் முதல்வராக பொறுப்பேற்றார். இதனையடுத்து மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் 19990-ம் ஆண்டில் இவர் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது மராத்தி மொழியை துவக்க பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார்.
அதுவரையில் ஆங்கிலம் வழி கல்வி மட்டுமே போதிக்கப்பட்டு வந்த நேரத்தில் இவரது அதிரடி நடவடிக்கைகள் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.